Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கம்

சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கம்

சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கம்

சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கம்

ADDED : ஜூலை 26, 2024 03:26 AM


Google News
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது. கிளை தலைவர் கோவிந்தன் -தலைமை வகித்தார். இதில், அரசு போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்-களை நிரப்ப வேண்டும். தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு, பணி ஓய்வு பலன்களை உடனே வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி, பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கினர். நிர்-வாகிகள் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us