Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து ஆலோசனை

சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து ஆலோசனை

சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து ஆலோசனை

சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து ஆலோசனை

ADDED : ஜூலை 20, 2024 07:25 AM


Google News
தர்மபுரி : வங்கியிலிருந்து பணம் எடுத்து செல்லும், நபர்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்தல், சைபர் குற்ற செயல்கள் மூலம் வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை அபகரிப்-பது போன்ற குற்ற செயல்களை தடுப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம், தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், அனைத்து பொதுத்துறை வங்கி மேலாளர்கள் மற்றும் பிர-திநிதிகள் கலந்துகொண்டனர். தனியார் மற்றும் தேசிய மயமாக்-கப்பட்ட வங்கிகளின் பிரதிநிதிகளுடன் தர்மபுரி டி.எஸ்.பி., சிவ-ராமன் மற்றும் தர்மபுரி இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் பங்-கேற்றனர்.

மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் பேசியதாவது:

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி வங்கிக் கணக்கு, ஏ.டி.எம்., ரக-சிய குறியீடு எண் போன்ற விவரங்கள் கோரினால், அவற்றை புறக்கணிக்க வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், பொதுமக்களின் பணம் மற்றும் நகைகளை பாதுகாப்-பாக வைத்துக்கொள்ள, வங்கிக்கு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எடுத்துவரும் போது, பத்திரமாக எடுத்து வரவும் அறிவுறுத்த வேண்டும். நீண்ட நேரம் வங்கியில் இருக்கும் நபர்-களை கண்காணித்து, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கலாம். அதிகப்படியான தொகையை வங்கியிலிருந்து எடுத்துச் செல்லும் நபர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதிய-வர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்கின்றனரா என உறுதி செய்து-கொள்ள வேண்டும்.

இவ்வாறு பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us