/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான் நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்
நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்
நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்
நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்
ADDED : ஜூலை 20, 2024 07:31 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகு-தியில் அதிகளவில் மான்கள், காட்டெருமை, மயில்கள், காட்டுப்-பன்றிகள் உள்ளன.
அரூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து, நேற்று மதியம் 12:00 மணிக்கு, 2 வயதுடைய ஆண் புள்ளிமான், இரை தேடி மஜீத் தெருவிற்கு வந்தது. அதை, நாய்கள் துரத்தியதால் பள்ளி வாசலுக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் மானை மீட்டு சென்றனர். கடந்த இரு மாதங்களில் வனப்பகுதியிலிருந்து, அரூர் நகருக்குள் வந்த, இரண்டு மான்களை நாய்கள் கடித்ததில் உயிரி-ழந்தது குறிப்பிடத்தக்கது.