/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு
இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு
இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு
இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு
ADDED : மார் 21, 2025 01:13 AM
இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு
மகேந்திரமங்கலம்:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏருப்பள்ளி அடுத்த தின்னப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 60. இவர், பெங்களுருவில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். கடந்த, 18 அன்று தினப்பட்டிக்கு வந்தவர், 19 அன்று அதிகாலை, 3:00 மணிக்கு தின்னபட்டியில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல அவருடைய டி.வி.எஸ்., மொபட்டில் தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கொலசனஹள்ளி மேம்பாலம் அருகே சென்றார். அப்போது, பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மோதி, படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்தில் பலியானார். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* அரூர் ஆத்தோர வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 55. இவர் நேற்று காலை, 11:30 மணிக்கு அரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்து சென்றார். அப்போது, கடைவீதியில் இருந்து கச்சேரிமேடு நோக்கி சென்ற மகேந்திரா கார், அவர் மீது மோதியதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.