Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு

இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு

இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு

இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு

ADDED : மார் 21, 2025 01:13 AM


Google News
இருவேறு சாலை விபத்தில்முதியவர் 2 பேர் உயிரிழப்பு

மகேந்திரமங்கலம்:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏருப்பள்ளி அடுத்த தின்னப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 60. இவர், பெங்களுருவில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். கடந்த, 18 அன்று தினப்பட்டிக்கு வந்தவர், 19 அன்று அதிகாலை, 3:00 மணிக்கு தின்னபட்டியில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல அவருடைய டி.வி.எஸ்., மொபட்டில் தர்மபுரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கொலசனஹள்ளி மேம்பாலம் அருகே சென்றார். அப்போது, பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மோதி, படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்தில் பலியானார். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* அரூர் ஆத்தோர வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 55. இவர் நேற்று காலை, 11:30 மணிக்கு அரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்து சென்றார். அப்போது, கடைவீதியில் இருந்து கச்சேரிமேடு நோக்கி சென்ற மகேந்திரா கார், அவர் மீது மோதியதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us