ADDED : மே 24, 2025 07:10 AM
விருத்தாசலம் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் மகாத்மா காந்தி வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன்,35; இவரது மனைவி கீர்த்தனா. இருவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த வெங்கடேசன், கடந்த 17ம் தேதி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.