Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

ADDED : மே 22, 2025 11:30 PM


Google News
விருத்தாசலம்: ஆசைவார்த்தை கூறி பெண்ணுடன் நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பூர் அடுத்த இளங்கியனுாரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் பிரசாத், 26; இவரும், 22 வயதும் பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர். பெண்ணை திருமணம் செய்து கொள்வாத ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகினார்.

இந்நிலையில், பெற்றோருக்கு விருப்பம் இல்லை எனக்கூறி திருமணத்திற்கு மறுத்த பிரசாத், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட பெண்ணிற்கு, பிரசாத் பெற்றோர் மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கவிதா வழக்குப் பதிந்து பிரசாத்தை கைது செய்து, மிரட்டல் விடுத்த தந்தை கோவிந்தசாமி, தாய் கனகம்மாள் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us