Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தவறி விழுந்த தொழிலாளி சாவு

தவறி விழுந்த தொழிலாளி சாவு

தவறி விழுந்த தொழிலாளி சாவு

தவறி விழுந்த தொழிலாளி சாவு

ADDED : மார் 25, 2025 06:50 AM


Google News
புவனகிரி : கீரப்பாளையத்தில் தளவாட பொருட்கள் ஏற்றி சென்ற வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

கீரப்பாளையம் வடஹரிராஜபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம்,50; கூரை வீடு கட்டும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கீரப்பாளையம் ஆர்.கே.நகர் திரவுபதியம்மன் கோவில் தெருவில் வீடு கட்டும் வேலை செய்தார்.

அப்போது, வீட்டில் இருந்து பிரித்தெடுத்த பழைய தளவாட பொருட்களை, ஊருக்கு ஒதுக்குப்புற இடத்தில் கொட்டுவதற்காக, குப்பை அள்ளும் வாகனத்தில் ஏற்றி சென்றார்.

கீரப்பாளையம் அருகே சுடுகாட்டு பகுதிக்கு சென்றபோது, வாகனத்தில் இருந்து பரமசிவம் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us