ADDED : பிப் 23, 2024 10:30 PM
கடலுார் : கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்த பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி மோகன பிரியா, 40; திருமணமாகி 13 ஆண்டுகளாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், கடந்த ஓராண்டாக கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.