ADDED : மே 14, 2025 11:38 PM
வடலூர்: பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
வடலூர், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர், மணிவேல், 42. இவரது மனைவி மாலா, 38. தம்பதியருக்கு, 1 மகன் மற்றும், 1 மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் தம்பதி இடையே குடும்ப செலவு செய்வது குறித்து தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த மாலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.