ADDED : ஜன 08, 2025 05:45 AM
புவனகிரி : புவனகிரி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி புது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வானை, 58. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்து பலத்த அடிபட்டார். இதனால் அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி வைத்தியம் பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரது மகள் வீட்டு பூஜை அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை முயன்றார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
புவனகிரி போலீசார் வழக்கு பதிவு விசாரிக்கின்றனர்.