Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விஷம் குடித்து  பெண் தற்கொலை

விஷம் குடித்து  பெண் தற்கொலை

விஷம் குடித்து  பெண் தற்கொலை

விஷம் குடித்து  பெண் தற்கொலை

ADDED : செப் 29, 2025 12:50 AM


Google News
பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து பெண் தற்கொ லை செய்து கொண்டார்.

பெண்ணாடம் அடுத்த கோனுார், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 36; இவரது மனைவி சந்திரா, 33; இவர், தனது இரு மகன்களை கடந்த ஓராண்டாக விருதுநகரில் உள்ள தாய் வீட்டில் தங்கி படிக்க வைத்து வந்தார்.

கடந்த மாதம் சந்திரா கோனுாருக்கு வந்தார். கடந்த 21ம்தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால், மனமடைந்த சந்திரா, பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us