ADDED : ஜன 11, 2024 04:20 AM
கடலுார்: மது அருந்துவதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் முதுநகர் அப்பாவு செட்டித் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அரவிந்த், 25; மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர், அடிக்கடி குடித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் இருந்ததை, மனைவி சந்தியா கண்டித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஏற்பட்ட பிரச்னையில், ஆத்திரம் அடைந்த அரவிந்த், படுக்கை அறையில் மின் விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து அவரது மனைவி சந்தியா கொடுத்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.