ADDED : அக் 07, 2025 12:26 AM

கடலுார்; கடலுார் புதுக்குப்பம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பராசக்தி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை நிறைவு தினத்தையொட்டி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட டிப்பர் லாரிஉரிமையாளர் சங்க தலை வர் பிரகாஷ் தலைமை தாங்கி, 100 பெண்களுக்கு சேலை வழங்கினார்.
ஆயுதப்படை டி.எஸ்.பி., அப்பாண்டராஜ், இன்ஸ் பெக்டர் அருட்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், நட்ராஜ் முன்னிலை வகித்தனர்.
கோவில் பூசாரி ராமு மற்றும் நிர்வாகிகள் குமார், முருகன், குமரவேல், அஷ்ரப் அலி, மணிவண்ணன், விஷ்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.


