ADDED : ஜன 13, 2024 03:43 AM
கடலுார் : கடலுார் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை தாங்கினார். கடலுார் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்ற செயலாளர் கலைச்செல்வி வரவேற்றார்.
விவேகானந்தர் உருவப்படத்திற்கு சிறுவர் மன்ற தலைவர் மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓவியப்போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாரதிதாசன் இலக்கிய மன்ற மாவட்ட தலைவர் நாகராஜன் பரிசுகள் வழங்கினார்.
உதவி ஆசிரியை விஜயா நன்றி கூறினார்.