/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : செப் 23, 2025 07:47 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பல்லவராயநத்தம் கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பண்ருட்டி தாலுகா, பல்லவராயநத்தம் கிராமத்தில்150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் குயிலாப்பாளையம், பி.வி.என்.தொட்டி, குச்சிப்பாளையம் மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வோர் வழிபட்டு வந்தனர்.
கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 14ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஒரு தரப்பினர் கோவிலில் தங்களுக்கும் உரிமை வேண்டும் எனவும், இல்லையெனில் பிரச்னை ஏற்படும் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், கிராம மக்கள் தரப்பில் சரியான பிரதிநிதிகள் இல்லாமல் சில முடிவுகளை எடுத்தனர்.
இதைக் கண்டித்து பா.ம.க.,மாவட்ட செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், கோவி ல் விழாவிற்காக நடந்த பேச்சுவார்த்தையில் ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்ய வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.