Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீராணம் தண்ணீர் செல்லும் பாலத்திற்கு ஆபத்து

வீராணம் தண்ணீர் செல்லும் பாலத்திற்கு ஆபத்து

வீராணம் தண்ணீர் செல்லும் பாலத்திற்கு ஆபத்து

வீராணம் தண்ணீர் செல்லும் பாலத்திற்கு ஆபத்து

ADDED : ஜன 08, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
சென்னை - கும்பகோணம் சாலையில், சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் குறுகிய வளைவு பாலம் உளளது. வீராணம் ஏரி தண்ணீர் வெள்ளாற்றுக்கு செல்லும் வகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர். திருவாரூர், புதுக்கோட்டை, அரியலுார், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

பாலம் மிகவும் குறுகியதாக உள்ளதால் கனரக வாகனங்கள் வளைந்து செல்லும்போது தடுப்பு சுவரில் உரசி செல்கின்றன.

பாலத்தில் கனரக வாகனங்கள் மோதியதில் தடுப்பு சுவர் ஷட்டர் பகுதியில் கட்டைகள் உடைந்து சேதமடைந்தது. இது, பல ஆண்டுகளாக சீரமைக்கப்பவில்லை

பொதுப்பணித்துறையினர் வளைவு பாலத்தை பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போட்டுள்ளனர். பிளவு ஏற்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்தால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது.

பாலத்தில் அதிகளவு அகலத்தில் பிளவு ஏற்பட்டுள்ள தடுப்பு சுவர்கள் வாகனங்கள் செல்லும் அதிர்வால் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து தடுப்பு சுவர் பிளவு பகுதியை விரைந்து சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us