Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

திருமணமாகாத விரக்தி வாலிபர் தற்கொலை

ADDED : அக் 17, 2025 11:34 PM


Google News
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜ்குமார், 30. டிரைவர். இவருக்கு திருமணம் செய்ய பெண் தேடியுள்ளனர்.

பெண் கிடைக்காததால் மனமுடைந்துள்ளார். திருமணமாகாத விரக்தியில் இருந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us