Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பாதாள சாக்கடை திட்டம் பெண்ணாடம் மக்கள் கோரிக்கை

பாதாள சாக்கடை திட்டம் பெண்ணாடம் மக்கள் கோரிக்கை

பாதாள சாக்கடை திட்டம் பெண்ணாடம் மக்கள் கோரிக்கை

பாதாள சாக்கடை திட்டம் பெண்ணாடம் மக்கள் கோரிக்கை

ADDED : ஜன 21, 2024 04:48 AM


Google News
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டத்தில், பெண்ணாடம், தேர்வு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்கு அதிகளவு சாதாரண மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சியின் எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதனால் பேரூராட்சி வார்டுகளில் உள்ள வடிகால் வசதிகள் போதுமானதாக இல்லை.

மழை காலங்களில் பல இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் முறையாக வெளியேற போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.

பல வார்டுகளில் கழிவு நீர் வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடும் அவல நிலை தொடர்கிறது.

எனவே, பெண்ணாடம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என, பேரூராட்சி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us