Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறித்த நேரத்தில் பஸ் இயக்க கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை 

குறித்த நேரத்தில் பஸ் இயக்க கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை 

குறித்த நேரத்தில் பஸ் இயக்க கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை 

குறித்த நேரத்தில் பஸ் இயக்க கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை 

ADDED : ஜூன் 11, 2025 07:54 PM


Google News
விருத்தாசலம்; குறித்த நேரத்தில் பஸ் இயக்க கோரி, கிராம மக்கள் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த பிஞ்சனுார், வலசை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும் மங்கலம்பேட்டை, விருத்தாசலம் பகுதிக்கு தினசரி வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த கிராமங்களுக்கு குறித்த நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தினசரி கால தாமதமாக செல்லும் நிலை உள்ளது.

இதனை கண்டித்து, பிஞ்சனுார், வலசை கிராம மக்கள், நேற்று போக்குவரத்து பணிமனை 1ஐ முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us