ADDED : மார் 15, 2025 09:03 PM
ஸ்ரீமுஷ்ணம் ; ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கானுாரை சேர்ந்தவர் மதன கிேஷார், 35; இவரும், அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை தனது அண்ணி கலா வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால், மதனகிேஷார் மற்றும் உறவினர்கள் ஆனந்தராஜ், ராஜரத்தினம், கிளின்டன் ஆகியோர் கலாவிடம் தகராறு செய்து தாக்கினர்.
ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப் பதிந்து மதனகிேஷார், கிளின்டன், 32; ஆகியோரை கைது செய்தனர்.