/உள்ளூர் செய்திகள்/கடலூர்/'தினமலர்' மெகா கோலப்போட்டி: விழாக்கோலம் பூண்டது கடலுார் சில்வர் பீச் * பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்'தினமலர்' மெகா கோலப்போட்டி: விழாக்கோலம் பூண்டது கடலுார் சில்வர் பீச் * பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்
'தினமலர்' மெகா கோலப்போட்டி: விழாக்கோலம் பூண்டது கடலுார் சில்வர் பீச் * பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்
'தினமலர்' மெகா கோலப்போட்டி: விழாக்கோலம் பூண்டது கடலுார் சில்வர் பீச் * பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்
'தினமலர்' மெகா கோலப்போட்டி: விழாக்கோலம் பூண்டது கடலுார் சில்வர் பீச் * பரிசு மழையில் நனைந்த போட்டியாளர்கள்

மகளிர் குவிந்தனர்
கடலுாரில் முதல் முறையாக 'மெகா' கோலப்போட்டி நடத்தப்பட்ட நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே மகளிர் ஆர்வமுடன் குவிந்தனர்.
நடுவர்குழு திணறல்
புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என மூன்று பிரிவுகளில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. போட்டியாளர்களுக்கு 4 க்கு 4 அடி இடம் ஒதுக்கப்பட்டது. சரியாக 7:00 மணிக்கு துவங்கிய போட்டி, 8:00 மணிக்கு முடிந்தது. ஒரு மணி நேரத்தில், போட்டியாளர்கள் பல்வேறு வண்ணங்களில் கோலங்களை வரைந்து அசத்தினர். இதனால், கடற்கரை சாலை அழகோவியங்களாக காட்சியளித்தன.
பரிசு மழையில் ேபாட்டியாளர்கள்
புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் என 3 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. கலெக்டர் தம்புராஜ், எஸ்.பி., ராஜாராம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, சிறந்த கோலமிட்ட மகளிருக்கு பரிசு வழங்கினர்.
அனைவருக்கும் பரிசு
கோலப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் சேலை மற்றும் பிளவுஸ் பிட், மளிகை பொருட்கள், பேஸ் கிரீம், பவுடர், ேஹர் ஆயில், சில்வர் பாக்ஸ், மஞ்சள் துாள் பாக்கட், குங்குமசிமிழ், காய்கறி விதை பாக்கெட், கோலமாவு பாக்கெட், லிவிஸ்டா இன்ஸ்டண்ட் காபிதுாள், வாட்டர் பாட்டில், பேன்சி பொருட்கள், காலண்டர், கேக், பூச்செடி 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது.
வாகன வசதி
கோலப்போட்டியில் பங்கேற்க வருபவர்களின் வசதிக்காக கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து அதிகாலை 4:00 மணி முதல் அரசு பஸ்கள் மற்றும் மஞ்சக்குப்பம் தபால் நிலையம், கிருஷ்ணாலயா தியேட்டர் அருகில் இருந்து வேன் இயக்கப்பட்டது.
விழாக்கோலம்
கடலுார் சில்வர் பீச்சில் மகளிர் வரைந்த வண்ண கோலங்களை ஏராளமான பொதுமக்கள் திரண்டு பார்த்து ரசித்தனர்.