ADDED : மார் 15, 2025 09:00 PM
கடலுார்; தெப்ப திருவிழாவிற்கு சென்ற மகளை காணவில்லை என போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.
கடலுார் முதுநகர் மோகன்சிங் தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் மகள் பவினா,20. இவர், நேற்று முன்தினம் தெப்பல் திருவிழாவிற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பவினாவின் தாய் தேவி அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.