ADDED : செப் 29, 2025 12:56 AM
வடலுார்: வடலுார் அடுத்த தென்குத்து பகுதியை சேர்ந்தவர் எஸ்தாகி மனைவி ஜெயமேரி, 85; இவர் அதே பகுதியில் உள்ள சர்ச் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். நேற்று காலை அவரது மகள் ரோஸ்மேரி சென்று பார்த்த போது, ஜெய மேரி இறந்தது தெரியவந்தது.
தனது தாய் சாவில் சந்தேகம் இருப்பதாக ரோஸ்மேரி அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


