Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காய்கறி அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு

காய்கறி அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு

காய்கறி அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு

காய்கறி அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் அருள்பாலிப்பு

ADDED : மார் 22, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த மாசி மக விடையாற்றி உற்சவத்தில், பஞ்சமூர்த்திகள் காய்கறி, கனிகள் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி, பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், மாசி மகம், தீர்த்தவாரி, தெப்பல் உற்சவங்கள் விமர்சையாக முடிந்தன.

தொடர்ந்து, விடையாற்றி உற்சவ ஆறாம் நாளான நேற்று முன்தினம் மாலை, நுாற்றுக்கால் மண்டபத்தில், ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் உற்சவர் சுவாமிகள் எழுந்தருளினர்.

ஆப்பிள், ஆரஞ்சு, பலா, திராட்சை, மாதுளை, வாழை, கொய்யா, அன்னாசி உள்ளிட்ட பழங்கள்; கத்தரி, கேரட், உளுளை, பீன்ஸ், அவரை, பூசணி, சுரைக்காய், வெண்டை உள்ளிட்ட காய்கறிகளால் மாலைகள் அணிவித்து, காய்கனி அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us