Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாண்டராசன்குப்பத்தில் கோவில் கும்பாபிஷேகம்

வாண்டராசன்குப்பத்தில் கோவில் கும்பாபிஷேகம்

வாண்டராசன்குப்பத்தில் கோவில் கும்பாபிஷேகம்

வாண்டராசன்குப்பத்தில் கோவில் கும்பாபிஷேகம்

ADDED : ஜன 23, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பம் மற்றும் வன்னியர்புரம் கிராமத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன், பாலமுருகன், வள்ளி தேவசேனா சமேத சக்திமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

கும்பாபிேஷக பூஜைகள் கடந்த 21 ம் தேதி காலை துவங்கியது. இரவு 8:00 மணிக்கு முதல்கால யாசாலை பூஜை நடந்தது. நேற்று (22ம் தேதி) காலை 6:00 மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை, துவங்கியது.

8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9:15 மணிக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்ககள் கோவில் உலா வந்து, பாலவிநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகள் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.

9:45 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சக்தி முருகன் கோவில், 10:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இரவு சாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us