ADDED : செப் 11, 2025 03:23 AM

கடலுார்: வடலுார் அடுத்த சந்தை வெளிப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க்கூடல் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியை நம்பிக்கை மேரி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியை சொர்ண சுப்புலட்சுமி வரவேற்றார். மாணவ, மாணவிகள் பங்கேற்ற போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. போட்டிகளை ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் பவுலின் மேரி, பிரான்சிஸ், விஜயபாலன், அமிர்தமேரி, சந்திரா, சுலைக்கா பிவி உட்பட பலர் பங்கேற்றனர்.