Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசுப் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள்  விரைவில் துவங்கிட மாணவர்கள் எதிர்பார்ப்பு

அரசுப் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள்  விரைவில் துவங்கிட மாணவர்கள் எதிர்பார்ப்பு

அரசுப் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள்  விரைவில் துவங்கிட மாணவர்கள் எதிர்பார்ப்பு

அரசுப் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள்  விரைவில் துவங்கிட மாணவர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 19, 2025 07:37 AM


Google News
விருத்தாசலம் : மாவட்ட அரசுப் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகளை விரைவில் துவங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

கல்வி மட்டுமல்லாது விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, பல்வேறு திட்டங்களை அறிவித்தார் உதயநிதி. அதன்படி, மாவட்டங்கள் தோறும் கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானங்கள் உருவாக்குதல், சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

மேலும், பள்ளியளவில் தடகளப் போட்டிகள், கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, இறகுபந்து போட்டிகளில் தனித்திறனுடன் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்படி, 2025 - 26ம் கல்வியாண்டிலும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகளுக்கான உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, கடந்த 12ம் தேதி அரசுப் பள்ளிகளில், அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கும் வீரர்களை கண்டறியும் திட்டம், உலக திறனாய்வு தேர்வுப் போட்டிகள் துவங்கப்பட வேண்டும். ஆனால், மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருவதால், விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்படவில்லை. வரும் 23ம் தேதி முதல் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு குறுவட்ட அளவிலான போட்டிகளுக்கு ஆயத்தப்படுத்துதல், வட்டார அளவிலான போட்டிகள், வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கும் மாணவ, மாணவிகள் தயாராவர். தொடர்ந்து, வரும் ஆக., மாதத்தில் வருவாய் மாவட்ட அளவிலான புதிய மற்றும் பழைய விளையாட்டுப் போட்டிகள் துவங்கும்.

மேலும், பாரதியார் தினம், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் என மாதந்தோறும் ஒவ்வொரு வாரத்திற்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளது. வரும் 2026 ஜனவரி மாதம் வரை விளையாட்டுப் போட்டிகள் நடப்பதாக உத்தேசப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் விரைவில் விளையாட்டுப் போட்டிகளை துவங்கிட மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us