ADDED : அக் 03, 2025 01:42 AM

கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலாயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடந்தது.
பள்ளியின் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கி, மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் உதயகுமார்சாம், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


