/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 18, 2025 11:16 PM
கிள்ளை; சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது.
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். பி.டி.ஓ., அமுதா, சமூக பாதுகாப்பு தாசில்தார் ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர். 16 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில், துணை பி.டி.ஓ., சுப்புலட்சுமி, மாவட்ட மாணவரணி செயலாளர் அப்பு சத்தியநாராயணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காதர் மஸ்தான், சுபாகர், இளைஞரணி அமைப்பாளர் அன்புச்செல்வன், கிளை செயலாளர்கள் ஆனந்தன், ராஜ்குமார், அன்பு, சலீம், ஊராட்சி செயலாளர் ராஜீவ்காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலாளர் பிரித்திவிராஜ் நன்றி கூறினார்.