ADDED : அக் 06, 2025 01:47 AM
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


