Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாட்டரி விற்பனை விவகாரம் எதிரொலி மைக்கில் போலீசாருக்கு எஸ்.பி., 'டோஸ்'

லாட்டரி விற்பனை விவகாரம் எதிரொலி மைக்கில் போலீசாருக்கு எஸ்.பி., 'டோஸ்'

லாட்டரி விற்பனை விவகாரம் எதிரொலி மைக்கில் போலீசாருக்கு எஸ்.பி., 'டோஸ்'

லாட்டரி விற்பனை விவகாரம் எதிரொலி மைக்கில் போலீசாருக்கு எஸ்.பி., 'டோஸ்'

ADDED : செப் 05, 2025 03:27 AM


Google News
சிதம்பரம்:லாட்டரி விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகளை, ஓபன் மைக்கில் எஸ்.பி., வெளுத்து வாங்கிய சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் பிரபல லாட்டரி வியாபாரி நசீர்,56; இவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். இதற்கு போலீசார் உடந்தையாக இருந்ததாக வடக்கு மண்டல ஐ.ஜி., அஷ்ராகார்க் வரை புகார் சென்றது.

அதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி, பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா தலைமையில், தனிப்படை போலீசார், நசீரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், காவல் துறை அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரை பல லட்சம் ரூபாய் மாமூல் வழங்கியதை ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு உட்பட 7 பேர் வேலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட 7 உட்கோட்ட காவல் துறை அதிகாரிகளையும் ஓபன் மைக்கில் அழைத் த எஸ்.பி., ஜெயக்குமார், 'சிதம்பரம் பகுதியில் காலம் காலமாக லாட்டரி விற்பனையில் போலீசார் மாமூல் வசூலித்து வந்தது தெரிகிறது. இதில் விதிவிலக்காக ஒரு சில அதிகாரிகள் மட்டும் நேர்மையாக பணியாற்றினர்.

இனியும் லாட்டரி விற்பனையாளர்களிடம் தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக, வேறு மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுவர். லாட்டரி, கஞ்சா விற்பனைக்காக மாமூல் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக பேசினார்.

ஓபன் பைக்கில் அதிகாரிகளுக்கு எஸ்.பி., டோஸ் விட்ட சம்பவம் காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us