/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிராமங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்கி சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அசத்தல் கிராமங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்கி சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அசத்தல்
கிராமங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்கி சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அசத்தல்
கிராமங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்கி சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அசத்தல்
கிராமங்களில் சிறந்த மாணவர்களை உருவாக்கி சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அசத்தல்
ADDED : செப் 21, 2025 06:32 AM

கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியில் வேப்பூர் அருகே சிறுபாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கல்வியறிவு பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடையும் நோக்கில், கடந்த 1961ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி சிறுபாக்கம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது.
சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் பள்ளியில் சேர்ந்ததை தொடர்ந்து, 1979ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி துவங்கப்பட்ட 1961 முதல் 2025 வரை 36 தலைமை ஆசிரியர்கள் பணிபுரிந்தனர்.
தற்போது, தலைமை ஆசிரியராக டேவிட் சுந்தர் ராஜ் பணிபுரிகிறார். 23 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். சிறுபாக்கம் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 444 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் சாரணர் படை, தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சிலுவை சங்கம், சுற்றுச்சூழல் மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம், சிறார் திரைப்பட மன்றம், வினாடி-வினா மன்றம் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன.
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பெரும்பாலானோர், தற்போது, பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் பல்வேறு துறைகளில் உயர் பதவி வகித்து வருகின்றனர்.
கடந்த 2024-25ம் கல்வியாண்டில் நடந்த 10ம் வகுப்பு பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்கள், ஆசிரியர்களை பாராட்டி, சான்றுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு � பெரும்புதுாரில் நடந்த மாநில அளவிலான நாத சங்கமம் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். ஆண்டுதோறும் நடக்கும் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெற்று, தொடர் சாதனை படைக்கின்றனர்.
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களின் மீது கலெக்டரின் 'நடுவுல கொஞ்சம் கற்றலை தேடி' திட்டம் மூலமாக தனி கவனம் செலுத்தப்படுகிறது.
இங்கு படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்களின் மூலம் கல்வியறிவு, சமூக அறிவு, தனி மனித ஒழுக்கம், சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் உள்ளிட்டவை கற்றுக் கொண்டு சிறந்த மாணவர்களாக உருவாகி வருகின்றனர்.