Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுப்ரமணியருக்கு சஷ்டி வழிபாடு

சுப்ரமணியருக்கு சஷ்டி வழிபாடு

சுப்ரமணியருக்கு சஷ்டி வழிபாடு

சுப்ரமணியருக்கு சஷ்டி வழிபாடு

ADDED : ஜூன் 18, 2025 05:07 AM


Google News
பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், தேய்பிறை சஷ்டியையொட்டி,சுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், தேய்பிறை சஷ்டியையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் ஆகியவைகளால் சிறப்பு அபிேஷகம்; மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, காமராஜர் வீதி, பாலதண்டாயுதபாணி, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர், திட்டக்குடி வைத்தியநாதசுவாமி ஆகிய கோவில்களில் முருகர் சுவாமிக்கு தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us