Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

ADDED : பிப் 06, 2024 04:51 AM


Google News
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட, டிப்பர் லாரியை சுரங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று விருத்தாசலம் காய்கறி மார்க்கெட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர்.

அதில், கள்ளத்தனமாக கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.

அதன்பின் லாரியை பறிமுதல் செய்த சுரங்க துறை அதிகாரிகள் விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us