ADDED : செப் 08, 2025 03:06 AM
பெண்ணாடம்: வெள்ளாற்றில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இறையூர் வெள்ளாற்றில் இருந்து டாடா ஏஸ் வேனில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த இறையூர் கருப்புசாமி, 31, என்பவரை கைது செய்தனர். வேன் பறிமுதல் செய்யப்பட்டது.