ADDED : செப் 15, 2025 02:19 AM
விருத்தாசலம்: வெள்ளாற்றில் மொபட்டில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மொபட்டில் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்தவரை பிடித்து விசாரித்தனர்.
அவர், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த மதகளிர்மாணிக்கம் மதியழகன் மகன் கஜேந்திரன், 28, என்பது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து கஜேந்திரனை கைது செய்து, மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.