Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

ரூ. 2.50 லட்சம் நகை நெய்வேலியில் திருட்டு

ADDED : ஜூன் 11, 2025 07:15 AM


Google News
கடலுார்; நெய்வேலியில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெய்வேலி, வட்டம் 2ஐச் சேர்ந்தவர் வெங்கடேசன், 58; இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 7ம் தேதி வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது. திருடு போன பொருட்கள் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய் ஆகும். புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us