Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 07, 2024 06:21 AM


Google News
கடலுார் : மத்திய அரசு வழங்கும் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதிற்கு, 18 வயதிற்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், பிரதமரின் ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளின் திறமைகளை பாராட்டி வழங்கப்படுகிறது. மேலும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த விருதை பெறுவதற்கு, இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 5 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். https://awards.gov.in என்ற Online Portal-ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பரிந்துரைக்கலாம். 2024ம் ஆண்டு இவ்விருதுக்கான விண்ணப்பத்தை, ஜூலை 31ம் தேதிக்குள் பதிவு செய்தல் வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us