/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிப்., 2ல் சென்னையில் போராட்டம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்புபிப்., 2ல் சென்னையில் போராட்டம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
பிப்., 2ல் சென்னையில் போராட்டம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
பிப்., 2ல் சென்னையில் போராட்டம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
பிப்., 2ல் சென்னையில் போராட்டம் அரசு பணியாளர் சங்கம் அறிவிப்பு
ADDED : ஜன 10, 2024 11:19 PM
கடலுார்: பிப்., 2ம் தேதி, சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் கூறினார்.
கடலுாரில் அவர் கூறியதாவது;
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை அரசு அழைத்து பேசவில்லை. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்., 2ம் தேதி பணியாளர்களை ஒன்று திரட்டி, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு நிற ஆடை அணிந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒன்று கூடி, ஊர்வலமாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழக அரசு துாய்மை பணியாளர்களுக்கு கடந்த ஆண்டும் போனஸ் வழங்கவில்லை. இந்த ஆண்டும் வழங்கவில்லை. துாய்மை பணியாளர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.
அரசு அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். இந்த விஷயங்களில் தமிழக முதல்வர் கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மாநில பொருளாளர் சரவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராசாமணி உடனிருந்தனர்.