Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற... திட்டம்; ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவங்கியது

பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற... திட்டம்; ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவங்கியது

பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற... திட்டம்; ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவங்கியது

பிச்சாவரத்தை முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற... திட்டம்; ரூ.10 கோடியில் மேம்பாட்டு பணிகள் துவங்கியது

ADDED : மார் 24, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
கிள்ளை: பிச்சாவரம் சுற்றுலா மையம் ரூ.10 கோடி மதிப்பில், மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சதுப்பு நிலக்காடு களுடன், இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவில் சிறப்பு வாய்ந்தது.

இங்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, படகு சவாரி செய்து, சதுப்புநில காடுகளை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

பிச்சாவரத்தில், கடந்த 1984ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், பிச்சாவரம் படகு குழாம் துவக்கப்பட்டது. தற்போது, படகு குழாமில் 15 மோட்டார் படகுகள், 35 துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, ஆண்டுக்கு 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பிச்சாவரம் சுற்றுலா மையத்தை, முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது.

அதற்காக, 10 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

குறிப்பாக, உணவகம், ஓய்வு அறை, பார்வையாளர்கள் கூடம், குழந்தைகள் விளையாட்டு கூடம், வாகன நிறுத்துமிடம், பார்வை கோபுரம், நடைப்பாதை, சுற்றுலா பயணிகள் உணவு அருந்தும் கூடம், பயணிகள் நிழற்குடை, டிக்கெட் கவுண்டர், நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

தற்போது, அடித்தளம் அமைப்பதற்காக (பைல்) போடும் பணி துவங்கி நடந்து வருகிறது. மேம்பாட்டு பணிகள் அடுத்த ஆறு மாதங்களில் முடிந்துவிடும் என, கூறப்படுகிறது.

இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

கூடுதல் படகுகள் தேவை

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் கோடைக்காலம் துவங்க உள்ளதால், பிச்சாவரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். ஏற்கனவே விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர். அவர்களுக்கு போதிய படகு வசதி இல்லாததால், வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்வர். எனவே, கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், படகு சவாரிக்கு கூடுதல் படகுகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us