/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இரு பைக்குகள் திருட்டு போலீசார் விசாரணை இரு பைக்குகள் திருட்டு போலீசார் விசாரணை
இரு பைக்குகள் திருட்டு போலீசார் விசாரணை
இரு பைக்குகள் திருட்டு போலீசார் விசாரணை
இரு பைக்குகள் திருட்டு போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 30, 2025 03:51 AM
நெய்வேலி : நெய்வேலி வட்டம் 7, என்.எல்.சி., குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். என்.எல்.சி., அதிகாரி. கடந்த 27ம் தேதி தனது வீட்டில் பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது பைக் காணாமல் போயிருந்தது. அதேபோல் வடக்குத்து தில்லை நகரை சேர்ந்தவர் பிரபாகரன். வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இவரது பைக்கையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இதுகுறித்து இருவரும் கொடுத்த தனித்தனி புகார்களின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அடுத்தடுத்த வீடுகளில் பைக் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.