Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அனல் காற்று எதிரொலி பீச்சில் குவிந்த மக்கள்

அனல் காற்று எதிரொலி பீச்சில் குவிந்த மக்கள்

அனல் காற்று எதிரொலி பீச்சில் குவிந்த மக்கள்

அனல் காற்று எதிரொலி பீச்சில் குவிந்த மக்கள்

ADDED : ஜூன் 09, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
கடலுார்,: கடலுாரில் நேற்று வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் மாலையில் சில்வர் பீச்சில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. நேற்று, மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இருப்பினும் அதற்கு மாறாக வெயில் அதிகரித்தது. அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதாலும், பகல் பொழுதில் வெப்பக் காற்றினால் அவதியடைந்த மக்கள் மாலையில் காற்று வாங்க சில்வர் பீச்சில் குவிந்தனர். மேலும் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் புதியதாக அமைக்கப்பட்டிருக்கும் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்த தரை, பார்க்குகளில் உட்கார்ந்து காற்று வாங்கினார். சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us