ADDED : ஜன 17, 2024 03:06 AM
தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் கட்டப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த கட்டடத்தில் மாதந்தோறும் ஊராட்சி தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் கூட்டங்கள் நடத்தி, ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படுகிறது.
ஆனால், கடலுார் ஒன்றியம் குமளங்குளம் ஊராட்சிக்கு அலுவலகம் இல்லாமல், பக்கத்து ஊரில் உள்ள சேவை மைய கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் இடமாக உள்ள ஊராட்சிக்கு கட்டடம் இல்லாதது வேதனையாக உள்ளது.


