ADDED : செப் 15, 2025 02:18 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் அரசு மேல்நிலை பள்ளியில், 2 வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுதமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வேணுகோபால் வரவேற்றார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, குத்து விளக்கேற்றினார்.
விழாவில், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் கோவிந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளா ளர் கோவிந்தராசு உட்பட பலர் பங்கேற்றனர். முதுகலை ஆசிரியர் விஜயப் ரீத்தா நன்றி கூறினார்.