Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

ADDED : ஜன 19, 2024 08:05 AM


Google News
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பணப்பாக்கத்தில் ரயில் மோதி இறந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த பணப்பாக்கத்தில் ரயில் பாதையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்ட இறந்துகிடந்தார். அந்தவழியாக விவசாய நிலத்திற்கு சென்ற பொதுமக்கள் இதை பார்த்து புதுப்பேட்டை போலீசாருக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விழுப்புரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து விசாரித்ததில் இறந்தவர் வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல்,40; கூலிதொழிலாளி; என்பது தெரியவந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us