ADDED : செப் 23, 2025 11:36 PM
குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சித்தாலிக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய விருப்பாட்சி காளிமுத்து, 30; என்பவரை கைது செய்து, தப்பியோடிய பாலு, அரவிந்த், செந்தில், சித்தாலிக்குப்பம் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.