ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி தற்கொலை
ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி தற்கொலை
ரயில்வே ஸ்டேஷனில் மூதாட்டி தற்கொலை
ADDED : மே 21, 2025 05:09 AM

குறிஞ்சிப்பாடி : ரயில்வே ஸ்டேஷனில் அடையாளம் தெரியாத மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
குறிஞ்சிப்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடையில் நேற்று காலை மூதாட்டி ஒருவர் துாக்கில் சடலமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவலறிந்த கடலுார் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மூதாட்டி சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.