ADDED : ஜன 12, 2024 04:03 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு நேற்றுநிகும்பலாயாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கராதேவி கோவில்கள் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று தை மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலாயாகம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது. 1:30 மணிக்கு யாக வேள்வியில்மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது.
அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.