ADDED : ஜன 31, 2024 02:03 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு இங்கு சிறப்பு யாகம் நடந்தது. அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடத்தி தீபாராதனை நடந்தது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.
பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.