ADDED : ஜன 12, 2024 04:01 AM
புவனகிரி: புவனகிரி பேரூராட்சி மாதாந்திரக்கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடந்தது.
புவனகிரி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் கந்தன் தலைமை தாங்கினார்.
துணைச்சேர்மன் லலிதா மணி, செயல் அலுவலர் செல்லப்பிள்ளை முன்னிலை வகித்தனர்.
இளநிலை உதவியாளர் முருகன் வரவேற்று, மன்ற பொருளை வாசித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். மேற்கொண்டபணிகள் மற்றும் மேற்கொள்ள பணிகள் குறித்து விவாதித்தனர்.